Skip to Main Navigation
செய்தி வெளியீடு ஜூன் 30, 2020

உலக வங்கியானது மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான நாடுகளின் புதிய இயக்குநரை அறிவிக்கிறது

கொழும்பு, ஜூலை 1, 2020 - சியோ காந்தா இலங்கைக்கான உலக வங்கியின் புதிய நாட்டு முகாமையாளராக உள்ளார். மொத்தமாக  2.3 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் ஒரு புதிய நாட்டு பங்குடைமை கட்டமைப்பின் வளர்ச்சியை அவர் மேற்பார்வையிடுவார்.

சியோ காந்தா கொழும்பை அடிப்படையாக கொண்டிருப்பார். ஃபரிஸ் ஹதாத்-செர்வோஸ் நேபாளத்தை தளமாகக் கொண்ட மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான நாட்டினுடைய இயக்குநர் பதவியை ஏற்றுக்கொள்கிறார்.

கோவிட்-19 நெருக்கடியின் உடனடி மற்றும் நீண்டகால சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களை தீர்க்க இலங்கை அரசு செயல்பட்டு வரும் நேரத்தில் காந்தாவின் நியமனம் இடம்பெறுகின்றது.

கோவிட் -19 இன் பரவலை இதுவரை இலங்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார மீட்சியை மீட்டெடுப்பது மற்றும் மக்களின் வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பது இப்போது மிகவும் முக்கியமானது ”என்று இலங்கைக்கான உலக வங்கி நாட்டின் முகாமையாளர் சியோ காந்தா கூறினார். "இலங்கையின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக அடுத்த நாட்டின் கூட்டு கட்டமைப்பைத் தயாரிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதட்காக, இலங்கை அரசாங்கத்துடனும் அதன் மக்களுடனும் வலுவான கூட்டுறவை உருவாக்குவதே எனது முன்னுருமையாகும்." என மேலும் அவர் தெரிவித்தார்.

ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த சியோ 1994 ஆம் ஆண்டில் ஒரு இளம் நிபுணராக உலக வங்கியில் சேர்ந்தார், பின்னர் ஆப்பிரிக்காவின் பொருளாதார நிபுணர் மற்றும் மூத்த பொருளாதார நிபுணர், தான்சானியாவில் மூத்த செயல்பாட்டு அதிகாரி மற்றும் பிலிப்பைன்ஸில் செயல்பாடுகள் மற்றும் சேவை முகாமையாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். செயல்பாட்டுக் கொள்கை & நாட்டு சேவைகள் துணை ஜனாதிபதியின் பெறுபேற்று அலகின் முகாமையாளராக அவரது மிகச் சமீபத்திய பணி இருந்தது.

"நிலையான வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பை மேம்படுத்துவதற்காக தனியார் துறை மற்றும் சிவில் சமூக குழுக்கள் உட்பட அனைத்து வளர்ச்சி பங்காளிகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன் " என்று காந்தா கூறினார்.

 

பதிப்பாசிரியருக்கான குறிப்புகள்:

இலங்கை: இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு இலங்கை கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார முறை  தயாரிப்புத் திட்டத்தினுடாக உலக வங்கி 215 மில்லியன் டாலர் தொகையினை தொற்றுநோயைத் தடுக்கவும், அதனை கண்டறிந்து ஈடுகொடுக்கவும், மற்றும் பொது சுகாதார தயார்நிலையினை வலுப்படுத்தவும் உதவுவதற்காக வழங்கியது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கும்போது நாட்டின் தயார்நிலையை அதிகரிக்க 87.24 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி இதில் அடங்குகிறது. இலங்கையில் உலக வங்கி இலாகாவில் 2.3 பில்லியன் டொலர் தொகை கொண்ட போக்குவரத்து, நகர்ப்புற, நீர், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு  துறைகள் உள்ளடக்கிய 20 திட்டங்கள் உள்ளன.


தொடர்பு

Colombo
Dilinika Peiris
+94115561325
dpeiris@worldbank.org
Washington D.C.
Yann Doignon
+1 202 473 3239
ydoignon@worldbank.org
Api
Api