Skip to Main Navigation
செய்தி வெளியீடு செப்டம்பர் 20, 2018

இலங்கையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை தேவை- உலக வங்கி தெரிவிப்பு

Image

கொழும்பு செப்டம்பர் 20, 2018 -  அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைவீழ்ச்சிக் கோலங்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் வாழ்க்கைத் தரத்தையும்  குறைத்துவிடக்கூடும்  என உலக வங்கியின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் அபாய வலயங்கள் பற்றிய அறிக்கை: வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம்:  தெற்காசியாவின் சனத்தொகையில் ஏறத்தாழ அரைவாசி அளவிலானோர் அபாய வலயங்கள் எனப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலே வாழ்ந்துவருவதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதுடன் பயிர்விளைச்சல் குறைவடைதல், குறைவடையும் தொழிலாளர் உற்பத்தி வினைத்திறன் அல்லது தொடர்புடைய சுகாதார தாக்கங்கள் ஆகியன காரணமாக அங்குவாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடையக்கூடும். மிகக் குறைவாக அபிவிருத்திசெய்யப்பட்டுள்ளமை, மோசமான இணைப்புக்களைக் கொண்டிருத்தல் மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருப்பதனால் இந்த அபாயவலயங்களில் உள்ள மக்கள் சில ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த அறிக்கைக்கு அமைவாக, இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் 2050ம் ஆண்டளவில் அதிகரித்த சராசரி வெப்பநிலையையும் அதிகமான மழைவீழ்ச்சி மாற்றத்தையும் அனுபவிக்கக்கூடிய அதிகமான சாத்தியக்கூறுகளை எதிர்நோக்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு பரிஸ் உடன்படிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைவாக காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படினும் இலங்கையின் சராசரி வருடாந்த வெப்பநிலையானது 2050ம் ஆண்டளவில் 1.0°C பாகை செல்சியஸ் முதற்கொண்டு 1.5°C செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என பகுப்பாய்வுகளில் இருந்து தீர்மானத்திற்கு வரமுடிந்துள்ளது. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிடின் இலங்கையின் சராசரி வெப்பநிலை 2.0°Cபாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது.

' காலநிலை மாற்றங்கள் குறைவான தனி நபர் வருமானத்திற்கு வழிகோலுவதுடன் அது தெற்காசியா முழுவதிலும் வறுமை மற்றும் சமத்துவமின்மையை அதிகரிக்கும்' என தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் முதன்மை பொருளியலாளர்களிலொருவரும் இந்த அறிக்கையைத் தயாரித்தவருமான முத்துக்குமார மணி தெரிவித்ததுடன் ' காலநிலை மாற்றத்தினால் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பகுதிகளை இனங்காண்பது  குறிப்பிட்ட பகுதிகள் மற்றும்  அங்குவாழும்  சமூகங்களுக்கு மிகவும் அவசியமான வளங்களையும் அவர்களுக்கு தேவையான உதவி நடவடிக்கைகளையும் முன்னுரிமைப் படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவும்' என மேலும் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக தாக்குபிடிக்கும் உள்ளக திறனை கட்டியெழுப்புவதற்கு தேவையான முதலீடுகள் மற்றும் மூலோபாயங்களை முன்னிலைப்படுத்துவதற்கான தெரிவுகளை இந்த அறிக்கையானது வழங்குகின்றது. விவசாயத்துறையைச் சாராத தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், சந்தையை அணுகுதலுக்கான வாய்ப்புக்களை மேம்படுத்துல்,  கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துதல் போன்றவற்றினூடாக காலநிலையிடன் நெருங்கிய தாக்கம் குறைவான துறைகளில் வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலமாக அதிக அபாயத்தினை முகங்கொடுக்கக்கூடிய தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தை காலநிலையுடன் தொடர்புடைய தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஒட்டுமொத்த பாரதூரத்தன்மையில் இருந்து குறைக்க முடியும் என ஆய்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

காலநிலை தாக்குபிடிக்கும் திறனுக்கு ஒத்துழைப்பு வழங்கல்  மற்றும் காலநிலை மாற்றத்திற்கு தழுவிக்கொண்டு செயற்படல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் உலக வங்கி மிக நெருக்கமாக பணியாற்றுகின்றது. காலநிலை தாக்குதிறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் செயற்பாடுகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு தாக்குப்பிடித்தல் போன்றவற்றை மேம்;படுத்துவதற்கான முதலீடுகளுக்கு ஒத்துழைப்பளிக்கின்றது. உத்தேச காலநிலைக்கு தாக்குபிடிக்கும் திறன்மிக்க நீர்பாசன விவசாய திட்டமானது இவ்வருடத்தில் அனுமதிக்காக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதுடன்  நாட்டில் இனங்காணப்பட்டுள்ள அபாயவலயங்களிலுள்ள நீர்பாசன கட்டமைப்புக்களை புனரமைப்பது உட்பட விவசாயத்திற்கு தேவையான மேம்படுத்தப்பட்ட நீர்முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும்.

'மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, சந்தையை நோக்காகக்கொண்ட மறுசீரமைப்புக்கள், மேம்படுத்தப்பட்ட மனித ஆற்றல்களும் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தம் ஆகிய அதிகரிக்கும் அச்சறுத்தல்களுக்கு வலுவான நிறுவன ரீதியான இயல்திறனிலிருந்து பதிலளிக்கக்கூடியதாக அமைந்திருப்பதனால் அபிவிருத்தி என்பது மிகச்சிறந்த தழுவிக்கொண்டு செயற்படல் மூலோபாயமாகும்.' என மணி மேலும் குறிப்பிட்டார்.

 


தொடர்பு

Colombo
Dilinika Peiris-Holsinger
+94115561325,
dpeiris@worldbank.org
Api
Api