Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை நவம்பர் 19, 2020

குழந்தைகள் பராமரிப்பு அகம் முதல் முன்பள்ளி வரை: இலங்கையில் ஆரம்ப வருட சேவைகளின் ஒருங்கிணைப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிதல்

Image

In the care of a nurturing ECD center. Photo credit: Viraj Kanishka Madanayake (Photo was taken during pre-covid days)


கதை சிறப்புக்கூறுகள்

  • சமூகம் மற்றும் குடும்ப அமைப்புக்கள், பால் வகி பாகங்கள் மற்றும் தொழில் சூழல் என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை மலிவான ஆரம்ப கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்பு என்பவற்றின் மீதான அணுகல்கள் அதிகரிப்பதற்கு காரணமாயுள்ளன
  • சிறுவர் பராமரிப்பு மற்றும் கல்வி ஒருங்கிணைப்பானது, பல வினைத்திறனான சேவைகளை இளம் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குவதற்கான ஒரு வளர்ந்து வரும் போக்காக தோன்றியுள்ளது.
  • இலங்கை இத்துறையில் குறிப்பிடத்தக்க முதலீட்டை செய்துள்ள அதேவேளை, ஆரம்ப கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆகியவற்றுக்கான அணுகல், பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை மற்றும் தரம் என்பவை தற்போதும் சவாலாகவே உள்ளன.

உலகம் முழுவதிலும், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆரம்ப வருட சேவைகளை விரிவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உருவாகியுள்ளது. ஆரம்ப குழந்தை பருவ  பராமரிப்பு மற்றும் கல்வியானது (ECCE), கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளதுடன்  சிறுவர் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியன பாரம்பரியமாக  வெளிப்படையான  வித்தியாசமான களங்களைக் கொண்டிருந்தாலும், குடும்பங்களுக்கான வினைத்திறனானதும் செயற்திறனானதுமான சேவைகளை வழங்குவதற்காக இவை இரண்டையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு வளர்ந்து வரும் போக்கு உருவாகியுள்ளது.


இலங்கையில், கட்டாயமான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கு  இலவசமான அணுகலை அரசாங்கம் வழங்கியுள்ள போதும், கட்டாயம் அல்லாத பாலர் வகுப்பிற்கு அது வழங்கப்படவில்லை. பல பாலர் வகுப்புகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்கள் தனியாரால் இயக்கப்படடுவதுடன் அவை கட்டணத்திட்கு உட்பட்டதுடன்  அறவிடப்படுவதுடன்,  அவற்றுக்கான அணுகலும்  அதை பெறுவதற்கான இயலுமையும் சனத்தொகையில் கணிசமான அளவிலான பகுதியினருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கான ஆட்சேர்ப்பு வீதம் அதிகமாக முறையே  99 வீதம் மற்றும் 84 வீதமாகும்.  2016 இல்  3-5 வயதுவரையான பாலர் வகுப்பு பிள்ளைகளுக்கான இவ்வீதமானது  56 வீதம் ஆகும்.


மலிவான சிறுவர் பராமரிப்பை அணுகுதலானது நேரடியாக ஒரு நாட்டின் தொழிற்படையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையில் பெண்கள் கல்வியில் உயர்நிலையை எட்டியிருந்தாலும், 2019 இல் தொழில் படையில் நாட்டின் பெண்களின் பங்களிப்பானது 34.5 மட்டுமே என்பதை கருத்தில் எடுப்பது அவசியமாகும்.2018 இல் சர்வதேச நிதி நிறுவனத்தினால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் இலங்கையில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தையை கொண்டுள்ள ஒரு பெண்ணின் தொழிற்படை மீதான பங்களிப்பானது அவ்வாறான இளம் குழந்தை அற்ற பெண்ணுடன் ஒப்பிடுகையில் 7.4 வீதத்தினால் குறைவானதாக என கண்டுபிடிக்கப்பட்டது.


வேறுஎன்ன, இலங்கை வயதடைந்த சனத்தொகையை கொண்டிருப்பதால்-அது தெற்காசியாவிலேயே மிகவும் வேகமாக வயதடையும் சனத்தொகையை கொண்டுள்ளது -மற்றும் குடும்ப அமைப்புகள் , பால் வகி பங்குகளில் மாற்றம், கூட்டுக் குடும்பங்களிருந்தான ஆதரவு குறைவடைதல் ,வீட்டில் இளம் பிள்ளைகளை பராமரிப்பதற்கு இயலாதவர்கள் தமது குடும்பத்தை விட்டு செல்லுதல் போன்றவற்றுக்காக குழந்தை பராமரிப்பிற்கான கேள்வியை அதிகரித்துள்ளனர்.

இங்கு நல்ல விடயம் என்னவெனில் தொழில் தருநர் சிறுவர் பராமரிப்பு விருத்தியடைவதற்கு ஆதரவளிக்கின்றனர். எனினும் 2019 ஆம் ஆண்டில் மொத்த தொழிலாளர்களில் 57.4 வீதத்தை கொண்டுள்ள முறைசாரா துறைகளில் வேலை செய்யும் பெற்றோர்களை இது சென்றடையவில்லை.


Image

Playing and learning… we grow together. Photo credit: Viraj Kanishka Madanayake (Photo was taken during pre-covid days.)


இலங்கையில்  ஆரம்ப  வருட  சேவைகள்

இலங்கையில் 2000 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்ப ஆண்டு சேவைகளில் முதலீடு செய்வதற்கான தேவையை தொடர்ச்சியான அரசாங்கங்கள் இனம்கண்டு வந்துள்ளன. நாட்டில் இச் சேவைகள்  மரபுரீதியாக,பல்வேறு முக்கிய அமைச்சுக்களின் ஈடுபாட்டுடன் பல்துறைபட்ட அணுகுமுறை மூலம், 2002 ஆகஸ்ட் வரை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக சேவை அமைச்சினால்(MWCASS) முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், மாகாண அதிகாரசபைகளும் தமது மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகளின் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றிற்கான சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளன.

பலதரப்பட்ட பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் தெளிவு குறைவு  ஆகியன ECCE துறையில் பெரிய சவாலாக காட்டப்பட்டுள்ளன. இது போதியளவு கொள்கை இணக்கப்பாடின்மை, வள ஒதுக்கீட்டில் தாக்கம் மற்றும் தொழிற்பாடுகளில் நகல் தன்மை .
ஆகியவற்றுக்கு இட்டுச் சென்றுள்ளது. இது ஒரே சீரான தரநிலை மற்றும் ஒழுங்குமுறைகள் என்பவற்றை நிலைநாட்டுதலை, குறிப்பாக தனியார் துறை தொடர்பான ஒழுங்குமுறைகள் மற்றும் அவற்றுடனான ஒருங்கிணைப்புகள் என்பவற்றை கடினமாக்கி உள்ளது.

2020, ஜனவரியில் கல்வி அமைச்சினால் (MoE) முன்வைக்கப்பட்ட பாலர் பாடசாலை கல்வி தொடர்பான தேசிய திட்டத்திற்கு இலங்கை அமைச்சு ஒப்புதல் அளித்தது. 2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலையும் அமைச்சுக் கடமைகளின் மீள் ஒழுங்கமைப்பினைத்  தொடர்ந்தும்  ECCE ஆனது MoE ன்  பார்வையின்கீழ் கொண்டுவரப்பட்டதுடன் MWCASS ஆனது பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலை மற்றும் முதல் நிலை கல்வி, பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் என்பவற்றுக்கான இராஜாங்க அமைச்சு (SMWCDPPESIES) என பெயரிடப்பட்டது. இம்மீள் ஒழுங்கமைப்பு  விவரங்களை சுற்றியுள்ள கலந்துரையாடலானது தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.

இம்மாற்றங்களானவை நாட்டில் ECCEன் அமைப்பில் கணிசமான அளவு மாற்றத்தை உருவாக்க வல்லதுடன்  ஆரம்ப ஆண்டு சேவைகள் மீதான மீள்மதிப்பீடு மற்றும் மீளமைப்பு ஆகியவற்றுக்கும் வழியமைக்கும்.நிர்வாக கட்டமைப்பிலான மாற்றங்களானவை பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான ஒருங்கிணைக்கப்பட்டதும் விரிவானதுமான சேவைகளை வழங்குவதற்கான கணிசமான பலமான பொறிமுறைக்கு வழியமைக்கும்.

உலகெங்கிலும் நாடுகள் சிறுவர் பராமரிப்பு மற்றும் கல்வி ஒருங்கிணைப்புகளில் தமது தனிநபர் தேவை மற்றும் சூழல் என்பவற்றுக்கு பொருந்தக்கூடிய  வேறுபட்ட மட்டங்களை பின்பற்றுகின்றன.   பின்லாந்து போன்ற நாடுகளில்,உதாரணமாக, ஒருங்கிணைக்கப்பட்ட நிலையங்கள் மூலம் ECCE சேவைகளை வழங்குவதன் மூலம் பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் நன்மைகளை இணைக்கின்றன. அயர்லாந்து போன்ற வேறு நாடுகளில், ஒருங்கிணைப்பு முயற்சியை தெரிவு செய்யாமல், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் சேர்க்கை ஆகியவற்றுக்கான பொறிமுறையை அறிமுகப்படுதும் அதேவேளை தனி வேறான சேவைகளை வழங்குதலை தொடர்கின்றன. ஒருங்கிணைத்தலானது கட்டாயமாக குறித்த நாட்டு மக்களின் சமூக சூழலை விளங்கியிருத்தல் வேண்டும், அத்துடன் ஒரு- அளவு- அனைவருக்கும் -பொருந்தும் ஒருங்கிணைப்பு அணுகுமுறையானது சாத்தியமற்றதும் அறிவுறுத்ததகாததுமாகும்.

2016 ஆரம்பங்களில் இருந்து உலக வங்கியானது இலங்கையில் ECCE துறைக்கு கணிசமான அளவு ஆதரவை வழங்கியிருந்தது. உலக வங்கியால் நிதி அளிக்கப்பட்ட ஆரம்ப குழந்தைபருவ அபிவிருத்தி (ECD) செயற்திட்டம் இலங்கை முழுவதிலும் ,சமமான அணுகுமுறையை அதிகரிப்பதனையும் ECCE சேவைகளின் தரத்தினை அதிகரிப்பதையும் நோக்காகக் கொண்டு SMWCDPPESIES இனால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஏனைய செயற்பாடுகளுடன் ஆசிரியர் பயிற்சி, வசதிகளை அதிகரித்தல், சிறுவர் அபிவிருத்திக்கான கணிப்பீடுகளை பிரித்தல்,ECD நிலையங்களுக்கான பொதுவான பதிவு செய்தல்முறைமையை உருவாக்குதல் மற்றும் ECCE சேவைகளுக்கான முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இவற்றை செய்வதற்கு முனைகின்றது. நிர்வாக மீள்ஒழுங்கமைப்பானது முழுமையான அல்லது பகுதியான ஒருங்கிணைப்பின்  நன்மை தீமைகளை கணிப்பதற்கு இலங்கைக்கு ஒரு பொருத்தமான சந்தர்ப்பத்தை வழங்குவதுடன் நாட்டில் ஆரம்ப வருட சேவைகளின் தரம்  அவற்றைத் அணுகுதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு ஒருங்கிணைத்தல் அம்சங்கள் எவ்வாறு சாத்தியமான உதவிகளை செய்யும் என்பதையும் கருத்தில் கொள்கின்றது.

இலங்கையின் ECCE துறைக்கு இது தீர்மானம் மிக்க காலப்பகுதியாகும். அர்ப்பணிப்புள்ள அரசாங்கத்துடன் அபிவிருத்திக்கான ஆதரவும் கிடைக்கையில் அது முன்னேற்றத்துக்கான காலமாக கனியும்.



Api
Api