Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை அக்டோபர் 9, 2018

தென்னாசியாவில் பிராந்தியத்திற்கான வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்துதல்.

Image

A Glass Half Full: The Promise of Regional Trade in South Asia report launch in Sri Lanka. The report explores the potential of open regionalism, suggesting how policymakers can maximize this to drive economic growth across the region and support deeper global integration.

World Bank


முக்கிய அம்சங்கள்

  • பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்றிற்கொன்று வர்த்தக தடைகளை ஏற்படுத்தியுள்ளன.இதன் காரணமாக அருகிலிருப்பதால் மக்களிற்கு கிடைக்ககூடிய நன்மைகளை மறுக்கின்றன.
  • போட்டியை சந்திப்பதன் காரணமாக உள்ளுர் தொழில்துறைகள் வலுவானவையாக மாறலாம் சிறந்த பெறுமதியான சேவைகளை தென்னாசியாவின் பொதுமக்களிற்கு வழங்கலாம்.
  • நாடுகள் மத்தியில் காணப்படும் நம்பிக்கiயின்மைக்கு வர்த்தகம் தீர்வை காணலாம்,அதிகரித்த பிராந்திய ஒத்துழைப்பிற்கு வழிகோலலாம்.

இன்று கொழும்பிலிருந்து நேரடியாக இந்தியாவின் 14 நகரங்களிற்கு விமானசேவைகள் உள்ளன.வாராந்தம் 147 விமானபயணங்கள் இடம்பெறுகின்றன.இவ்வாறான வலுவான தொடர்பு தென்னாசியாவிற்கு புதிய விடயம்.உதாரணத்திற்கு கொழும்பிற்கும் காத்மண்டுவிற்கும் இடையிலோ அல்லது காபுல் அல்லது பரோவிற்கு( பூட்டானின் ஒரேயொரு சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ள பகுதி) இடையிலோ நேரடி விமான சேவைகள் இல்லை.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பரஸ்பர வான் தொடர்பு என்பது பலகாலமாக சிந்திக்கப்பட்ட விடயம்.இலங்கை ஒரு வாய்ப்பை உணர்ந்து அதனை தழுவிக்கொண்டது.விமான சேவை தாராளமயப்படுத்தலிற்கு பலம் சேர்க்கும் வகையில் இலங்கைக்கு வந்த பின்னர் இந்திய பயணிகளிற்கு விசா வழங்கும நடைமுறையை 2003 முதல் ஆரம்பித்தது.

இன்று பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மத்தியில் காணப்படும் பரஸ்பர விமானசேவைகளைவிட இலங்கை இந்தியாவிற்கு இடையிலான முன்னணியில் காணப்படுகின்றது.2005 ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது இதன்காரணமாக இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகள் விஜயம் மேற்கொள்ளும் நாடாக இந்தியா மாறியுள்ளது.இதேவேளையில் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளதுடன் விமானகட்டணங்களின் விலை குறைவடைந்துள்ளது.

உலகவங்கியின் புதிய அறிக்கையான பாதிநிறைந்த கண்ணாடிப்பாத்திரம் - தென்னாசிய பிராந்திய வர்த்தகத்திற்கான நல்வாய்ப்புகள் என்பதில்   பதிவாகியிருக்கும் வெற்றிக்கதைகளில் ஒன்று இது.இந்த அறிக்கை யதார்த்தபூர்வமான விடயங்களை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது.இது திறந்த பிராந்தியவாதத்திற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்கின்றது.கொள்கை வகுப்பாளர்கள் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் ஆழமான சர்வதேச ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் இதனை எவ்வாறு ஆகக்கூடியளவிற்கு பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்குகின்றது.

இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வின் போது இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் இயக்குநர் -உலகின் மிகவும் குறைந்த அளவு இணைக்கப்பட்ட பகுதியாக எப்படி தென்னாசியா விளங்குகின்றது என்பதை சுட்டிக்காட்டினார்.கிழக்காசியாவின் மொத்த வர்த்தகத்தில் பிராந்திய வர்த்தகத்தின் பங்களிப்பு 50 வீதமானதாக காணப்படுகின்றது அதேவேளை தென்னாசிய வர்த்தகத்தில் இது ஐந்து வீதத்திற்கும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.உலகின் வறிய மக்களின் 33 வீதமானவர்கள் வாழும் பிராந்தியத்திற்கு இது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.


"எவரும் எல்லை கடந்த வர்த்தகம் குறித்து தற்பொது அச்சமடையவேண்டியதில்லை- மாறாக எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக இந்த சக்தியை சிறந்த வகையில் பயன்படுத்தவேண்டும்,இந்த புதிய போட்டித்தன்மையை எதிர்கொண்ட நிறுவனங்களும் பொருட்களும் தொடர்ந்தும் போட்டித்தன்மை வாய்ந்ததாக விளங்கலாம் என அவர் தெரிவித்தார்."
Idah Idah Pswarayi-Riddihough
The World Bank Country Director for Sri Lanka and the Maldives

Image

Sanjay Kathuria, author of the report, and Lead Economist and Coordinator, South Asia Regional Integration, in the World Bank’s Macroeconomics, Trade, and Investment Global Practice.

World Bank


பல தென்னாசிய நாடுகள்  தங்கள் அயல்நாடுகளை தொலைவில் உள்ள நாடுகளுடன் சிறந்த வர்த்தக நடவடிக்கைகளை கொண்டுள்ளன.

பிராந்தியத்தை துண்டாடப்படுவதற்கு மனிதனும் இயற்கையும் காரணம் எனினும் மனித நடவடிக்கைகளே அதிகளவிற்கு பிராந்தியத்தை பிரித்து வைத்துள்ளன,அருகில் உள்ளதால் கிடைக்ககூடிய நன்மைகள் மக்களிற்கும் நாடுகளிற்கும் செல்வதை தடுத்துள்ளனர் என அறிக்கையை எழுதியவரும் சிரேஸ்ட பொருளியலாளரும் தென்னாசிய பிராந்திய ஒருங்கிணைப்பிற்கான  ஒருங்கிணைப்பாளருமான சஞ்;சய் கத்தூரியா  தெரிவித்தார்.

தென்னாசியாவிற்கு இடம்பெறும் மொத்த பொருட்கள் வர்த்தகத்தின் பெறுமதி 3 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது எனினும் இது உண்மையில் 67 பில்லியன் டொலராக  காணப்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது இடம்பெறும் வர்த்தகத்திற்கும் உண்மையாக சாத்தியமான வர்த்தகத்திற்கும் இடையிலான பாரிய இடைவெளிக்கு தென்னாசியாவின் ஒவ்வொரு நாடும் மற்றைய நாட்டிற்கு எதிராக வெளிப்படுத்தும் பாரபட்சமே காரணம்.

உயர் வரிகளும் மேலதிக வரிகளும் தென்னாசியாவில் பொதுவான விடயங்கள்.2016 இல் இலங்கையில் மேலதிக வரிகள் சுங்க வரியின் மேலதிகமாக விதிக்கப்படுவதன் காரணமாக சராசரி வரி 10.8 வீதத்திலிருந்து 22.4 இரண்டுமடங்காகியுள்ளது.இதனால் அதிக விலைகளை செலுத்தவேண்டிய நிலைக்கு பிரஜைகள் ஆளாகியுள்ளனர்.

தென்னாசிய சுதந்திர வர்த்தக வலயம் ( சவ்டா)காணப்படுகின்ற போதிலும் அயல்நாடுகளுடனான வர்த்தகம் சுதந்திரமானதாக காணப்படவில்லை.சவ்டாவின் சலுகை வரிகளின்கீழ் பல பொருட்கள் உள்ளடக்கப்படாததே இதற்கு காரணம்.இலங்கையின் இறக்குமதிகளில் 44 வீதமானவை தென்னாசியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படும் அதேவேளை இலங்கையின் தென்னாசியா நாடுகளிற்கான ஏற்றுமதியில் 23 வீதம் சென்சிட்டிவ் பட்டியலிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.அறிக்கை வெளியிடும் நிகழ்வில் இடம்பெற்ற குழு உரையாடலில் கருத்து தெரிவித்த அட்வொகெட்டா நிறுவகத்தை சேர்ந்த ரவி ரட்ணசபாபதி நாடுகள் தங்களால் முடிந்தளவு துறைகளை பாதுகாக்க முயல்கின்றன என தெரிவித்தார்.இலங்கையின் வெளிநாடுகளிற்கான 20 முக்கிய  ஏற்றுமதிகளில்  15 எதிர்மறை பட்டியலில் உள்ளன அல்லது ஏதாவது வரி விதிப்பிற்குள்ளாகியுள்ளன.இந்தியாவின் முக்கிய 20 ஏற்றுமதிகளில் 7 ஏற்றுமதிகள் மாத்திரமே முன்னர் காணப்படாத குறிப்பிட்ட சலுகையை பெற்றுள்ளன.

மோசமான போக்குவரத்து, மற்றும் விநியோக உட்கட்டமைப்பும் குழப்பமான வெளிப்படை தன்மையற்ற வரி அல்லா நடவடிக்கைகளும் பிராந்தியத்திற்குள் வர்த்தக செய்வதற்கான செலவீனங்களை மிக அதிகமானவையாக்கியுள்ளன.உதாரணத்திற்கு இலங்கை நேபாளத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான செலவு பிரேசிலுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான செலவை விட அதிகமாகும்.மேலும் சேவை வர்த்தகத்தில் உள்ள முட்டுக்கட்டைகளும் குறைந்தளவு பிராந்திய நேரடி முதலீடுகளும் சேவை மற்றும்பிராந்திய சேவை மதிப்பு சங்கிலிகளில் வளர்ச்சி ஏற்படுவதை தடுக்கின்றன.

பிராந்தியத்திற்கு இடையிலான அதிகரித்த வர்த்தகத்தினால் அரசியல்வாதிகளை விட பொதுமக்களிற்கே நன்மைகள் அதிகம்.

வெரிட்டே ஆராய்ச்சி நிறுவகத்தினை சேர்ந்த ஆராய்ச்சி இயக்குநர் சுபாசினி அபயசிங்க ஏன் நாடுகள் தடைசெய்யும்  வரிகளை கொண்டுள்ளன என கேள்வி எழுப்பினார்?இவ்வாறான தடைகள் காணப்படுவது உள்நாட்டின் விலைகள் சர்வதேச விலைகளை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமானவை என்பதை புலப்படுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டார்.இதன் காரணமாக சர்வதேச அளவில் போட்டியிடும் திறனற்ற பல உள்நாட்டு தொழில்துறைகளை நாங்கள் இந்த பிராந்தியத்தில் கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.வாடிக்கையாளர்களை பொருத்தவரை குறைந்த தரத்திலான பொருட்களிற்கு அவர்கள் அதிக விலையை செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது.

லயன் புருவரி சிலோன் நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் சுரேஸ்சா இலங்கையின் தொழில்துறையினர் உண்மையில் வெற்றியடையவேண்டும் என்றால் அவர்கள் சர்வதேச வர்த்தகத்தை நேருக்நேர் எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்தார். தனது கருத்தை முன்வைப்பதற்கு அவர் கிரிக்கெட்டினை உதாரணம் காட்டினார். இலங்கை வீரர் முரளீதரன் 800 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றியவர், அவர் உள்ளுர் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தால் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பாரா சர்வதேச புகழை பெற்றிருப்பாரா? உலகின் மிகச்சிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் குமார் சங்ககார,அவர் உள்ளுர் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தால் இந்த புகழை பெற்றிருப்பாரா?அவர்கள் சர்வதேச அணிகளுடன் மோதியதன் காரணமாகவே இந்த சாதனைகளை நிகழ்த்தினர் என அவர் குறிப்பிட்டார்.


ஒரு தென்னாசியா: வர்த்தகம் பிராந்தியத்திற்கு இடையிலான சிறப்பான உறவிற்கு வழிவகுக்க கூடும்

பிராந்தியத்திற்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் ஏமாற்றமளிக்கின்றன என தெரிவித்தார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி.எனினும் வர்த்தகம் மற்றும் முதலீடு என வரும்போது வாகனத்தின் பின்கண்ணாடியால் பார்ப்பதை விட முன்கண்ணாடியால் பார்க்கும்போது ஒரளவு நம்பிக்கை ஏற்படுகின்றது என தெரிவித்தார்.

முழுமையான திட்டமொன்று உருவாவதற்காக காத்திருப்பதை விட வர்த்கர்கள் முன்னோக்கி நகர்வதற்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்தியாவின் வடகிழக்கு  நேபாளம் பூட்டான் பங்களாதேஸ் போன்ற பகுதிகளில் ஒத்துழைப்பு புகையிரத மற்றும் வீதி தொடர்புகளை அதிகரித்துள்ளது,மின்சார வசதிகளை பகிர்ந்துகொள்வதற்கும் நீர் முகாமைத்துவத்திற்கும் உதவியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இலங்கை இந்து சமுத்திரத்தில் சாதகமான அமைவிடத்தில் உள்ளமை அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தென்னாசிய சந்தை எங்கள் வாயிலில் உள்ளதால் இந்த பிராந்தியத்திற்கான எங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பது முதலாவது முன்னுரிமைக்குரிய விடயம் என இலங்கையின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.தென்னாசியாவிற்கான தனது ஏற்றுமதியை இலங்கை 1.2 பில்லியன் டொலரிலிருந்து 3 பில்லியன் டொலராக அதிகரிக்க முடியும் என்பதை இந்த அறிக்கை புலப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கை வர்த்தகத்தை ஊக்குவிக்கின்றது,வர்த்தகம் நம்பிக்கையை ஒருருக்கொருவர் தங்கியிருப்பதை சமாதானத்திற்கான சூழலை  ஊக்குவிக்கின்றது.பிராந்தியத்தில் உள்ள நாடுகளிற்கு மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முக்கியமான ஒரு விடயம்.வர்த்தகம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் வலுவான பிராந்திய உறவுகளை ஏற்படுத்தவும் உதவக்கூடும்.சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்பு குறித்து அதிகளவு நிச்சயமற்ற நிலை காணப்படும் ஒரு சூழலில் அதிகளவு பிராந்திய ஒருங்கிணைப்பின் மூலம் நாங்கள் அதிகளவு நம்பிக்கைகளை பெற முடியும், இதுஅனைத்துநாடுகளும்கூட்டாக முன்னெடுக்க வேண்டியநிகழ்ச்சி நிரல்,இதன் மூலம் உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

 



Api
Api